நாடு முழுவதும் உள்ள 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் 22 தேசிய சட்டப் பல்கலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் எல் எல் பி மற்றும் எல் எல் எம் படிப்பில் சேர கிளாட் என்ற நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் தேசிய சட்ட பல்கலையில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் மாதம் நடத்தப்படும் என தேசிய சட்ட பல்கலைகளின் கூட்டமைப்பு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 13ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது