கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை என்ற பெயரை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி சினேகன் மீது புகார் அளித்தார். அதில் தான் அறக்கட்டளை வழியாக சமூக பணிகளை செய்து வருவதாகவும், தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே சினேகன் இவ்வாறு பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனால் இந்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என்ற சினேகன் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்த நிலையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.