Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வித்தியாசமாக கேட்ட சத்தம்”…. ஏ.சி எந்திரத்தில் புகுந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

ஏ.சி எந்திரத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

கரூர் கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகா மையத்தில் இருக்கும் ஏசி எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஏ.சி எந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏ.சி எந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு காட்டுப் பகுதியில் விடப்பட்டது.

Categories

Tech |