Categories
மாநில செய்திகள்

ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் மாயம்… போலீசார் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டம் அருகே அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாயமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பவில்லை.

மாலை முழுவதும் அனைத்து சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடிய நிலையில், அவர்கள் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த நிலையில் அவர்களின் பெற்றோர்கள் காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர் மாணவர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து காவல் துறையினர் சக மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் படிப்பதற்கு அதிக செலவாவதால் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்க நாங்கள் விருப்பமில்லை என காணாமல் போன மாணவர்கள் சகமாணவர்களிடம் கூறியது தெரிய வந்ததுள்ளது. இதற்கிடையே விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே நான்கு மாணவர்களும் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அங்கே விரைந்துள்ளனர் .

Categories

Tech |