Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வேன்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!!

தனியார் பள்ளி மாற்று வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியில் அலமேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி அருகே நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளியின் மாற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அலமேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலமேலுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி விஜயகுமாரும் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |