தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு முறை நடைபெற்ற வருகின்றது.அதன் மூலமாக பத்திரப்பதிவு சார்ந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் போலி மற்றும் மோசடி வகையிலான பத்திரப்பதிவை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அவ்வகையில் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர் ஆய்வு செய்து அதனை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.நிலையில் தற்போது புதிய மாற்றமாக தேர்வுகள் நடத்தி அதன் மூலம் ஆவண எழுத்தர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆவண எழுத்தர் உரிமம் வழங்க சிறப்பு பொது தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வு எளிமையான முறையில் மாநிலம் முழுவதும் ஒரே தேர்வாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான வழிமுறைகளை பதிவுத்துறை தலைவர் தீர்மானித்துக் கொள்ளலாம். தேர்வுக்கான வினாத்தாள்களை துறை அலுவலர்கள் ஆலோசனைப்படி தயாரித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் இந்த ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் உரிமம் 5 வருடங்களுக்கு செல்லுபடி ஆகும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.