Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இரட்டிப்பு லாபம் வேண்டுமா….? இதோ அஞ்சல் துறையின் அருமையான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான்  கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் எந்த ஒரு தபால் நிலையத்திலும் இந்த விகாஸ் பத்திரத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்த பத்திரத்தை மாற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு இந்த கணக்கை அஞ்சல் அலுவலகத்தில் மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கு  மாற்றிக்கொள்ளலாம்.  இத்திட்டத்தில் குறைந்தது 1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை வாங்க முடியும்.

Categories

Tech |