Categories
தேசிய செய்திகள்

மாமனார் கொடுத்த பரிசு!… கல்யாண வீட்டை கருமாதி வீடாக மாற்றிய மருமகன்….. பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தில் மணப்பெண் வீட்டார் பரிசளித்த காரை ஓட்டிப் பார்த்த மணமகன், உறவினர்கள் மீது காரை மோதியதில் ஒருவர் பலியானார். அத்துடன் 4 பேர் காயமடைந்தனர். திருமணத்துக்கு முன் நடைபெறும் திலகமிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாப்பிள்ளைக்கு புதியதாக வாங்கிய காரை மாமனார் வழங்கினார். அப்போது மாப்பிள்ளை தனக்கு கார் ஓட்டத் தெரியாது என்பதை மறைத்து விட்டார்.

அதோடு கொடுத்த காரை ஓட்டிப் பார்க்கப் புறப்பட்ட மாப்பிள்ளை, பிரேக் பிடித்து வண்டியை திருப்புவதற்கு பதில் ஏக்ஸிலேட்டரை அழுத்த, கார் வேகமாக மணமக்களை வாழ்த்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் மணமகனின் உறவினர் சரளா தேவி (35) மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகினார். மேலும் 10 வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணமகனை கைது செய்தனர். இவ்வாறு திருமணமாகாமலேயே மணமகன் அருண்குமார் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |