கரூர் மாவட்டத்திலுள்ள புகலூரில் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாத அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருக்காட்டு துறையில் இருக்கும் மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் இருக்கும் கால பைரவர், ஈஸ்வரன் கோவிலில் இருக்கும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.