Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோருக்கு…. “ஒரே மாதிரியான படிவம்”….. மத்திய அரசுக்கு நிதியமைச்சகம் பரிந்துரை…..!!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு தற்போது 7 படிவங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வருவது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறையை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தவிர வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது ஐடிஆர் சகஜ் மற்றும் ஐடிஆர் சுகம் படிவங்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் சகஜ் படிவத்தை 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் மற்றும் வீடு சொத்துக்கள் போன்றவற்றின் வட்டி மூலம் வருமானம் பெறுபவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் ஒரே மாதிரியான விண்ணப்பங்கள் நடைமுறைக்கு வந்தாலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் படிவங்களும் நடைமுறையில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டத்தின் மூலம் தனிநபர்கள் தாங்கள் விருப்பப்பட்ட படிவத்தை தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |