Categories
உலக செய்திகள்

உச்சகட்ட பதற்றம்…. ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவிய வடகொரியா…!!!

வடகொரியா நேற்று மட்டும் சுமார் 23 ஏவுகணைகளை ஏவியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. அதன்படி, கொரிய தீபகற்பத்தில் சமீப நாட்களாக தொடர்ந்து ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டு வடகொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்வதை எதிர்க்கும் வடகொரியா, இவ்வாறு ஏவுகணை பரிசோதனை மேற்கொள்கிறது.

இது மட்டுமல்லாமல் தயக்கமில்லாமல் அணு ஆயுதங்களையும் உபயோகிப்போம் என்று வடகொரியா எச்சரிக்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடியாக சோதனை மேற்கொண்டிருக்கிறது. காலையில் 17 ஏவுகணைகளும் மதியம் 6 ஏவுகணைகளும் என்று மொத்தமாக சுமார் 23 ஏவுகணைகளை வடகொரியா ஏவி அச்சுறுத்தியுள்ளது.

வடகொரியா, ஏவுகணை பரிசோதனை மேற்கொண்ட அந்த பகுதியில் பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

Categories

Tech |