Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு!

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். இதன்விளைவாக நடைபெறவிருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மரணமடைந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 தொகுதிகளுக்கும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். அதன்படி இவ்விரு தொகுதிகளுக்கும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவ்விரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |