சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இங்கு ரூ.6.2லட்சம் புத்தகங்கள், மூவாயிரம் இ-புத்தகங்கள் உள்ளது. இங்கு தினசரி 2000 முதல் 2500 வாசகர்கள் வந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் நபர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த நூலகம் கடந்த அதிமுக ஆட்சியில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் புத்துணர்ச்சி பெற தொடங்கியது. பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கூட்டங்கள் பெரும்பாலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தான் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஆடிட்டோரியம் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் வீடியோக்களும் இங்கு தான் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் புதிய கழிவறைகள், புதுப்பிக்கப்பட்ட தரைதளம், புதிய எல்.இ.டி. சுவர், உயர்தர ஏசி, புதிய உபகரணங்கள், சிறப்பு விளக்கு அலங்காரங்கள் என வேற லெவலுக்கு மாறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 2 வது வாரத்தில் புது பொலிவுடன் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வாசகர்களை கவர திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறுவர், சிறுமியர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தவிர “TN Talk” என்ற தொடர் நிகழ்ச்சி நவம்பர் 3 வது வாரத்தில் இருந்து நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர்கள் பங்கேற்று உரையாற்றுவார்கள். குழந்தைகளுக்கு Virtual Reality Library அமைக்கப்பட்ட உள்ளது. இந்த நூலகத்தில் இருக்கும் அனைத்து கணினிகளையும் புதிதாக மாற்ற உள்ளது. குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் வகையில் உணவகம் ஒன்று வருகிறது. மேலும் புதிதாக புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வாரந்தோறும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்வுகள், கிட்ஸ் திருவிழா, மாறுவேட போட்டி,0ஓவிய போட்டிகள் ஆகியவைகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.