BSNL அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் நாட்டில் 4G வெளியீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நம் நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வைத்து 4G சேவைகளானது எப்போது வெளியிடப்படும் என்று BSNL தெரிவித்துள்ளது. இந்தியச்சந்தையில் 4G சேவைகளை வெளியிட BSNL நிறுவனம் நீண்டகாலமாகவே போராடி வருகிறது. இருப்பினும் 4G வெளியீட்டில் BSNL பெரும்பாலான தடைகளை எதிர் கொண்டு வருகிறது. இந்நிலையில் BSNL இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு இருக்கிறது.
இருந்தாலும் இவற்றில் சரியான வெளியீட்டுதேதி குறிப்பிடப்படவில்லை. எனினும் எப்போது 4G வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டுவிட்டர் பயனர் ஒருவர் BSNL இந்தியா-வை டுவிட்டரில் டேக் செய்து பிஎஸ்என்எல் 4G வெளியீடு பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். இவரது கேள்விக்கு பதிலளித்த BSNL இந்தியா “சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான காரியம் ஆகும். இதற்கு தேவையான தொழில்நுட்ப உபரணங்களானது தயாராகி வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி (அ) மார்ச்மாத வாக்கில் சேவைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்திருக்கிறது.