அமெரிக்கா நாட்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிகாகோ என்ற நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு நடந்த கொண்டாட்டத்தை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டினால் 3 வயது சிறுவன், 11 வயது சிறுமி மற்றும் 13 வயது சிறுவன் உள்பட 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை படுமோசமாக உள்ளது. 5 பேர் தீவிர சிகிச்சையிலும், 6 பேர் நலமுடனும் மற்றும் ஒருவரின் நிலைமை என்னவென தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடப்பது தெரிந்ததும் உடனடியாக, அந்த பகுதியிலிருந்து தப்பியோட பெண் ஒருவர் முயன்றிருக்கிறார். ஆனால், அவர் மீது அந்த வழியே வந்த கார் ஒன்று மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இது போன்று அமெரிக்க நாட்டில் கன்சாஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கடந்த திங்கட்கிழமை ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது, நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து, இதனை கட்டுப்படுத்த அதிபர் ஜே பைடன் தலைமையிலான அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்தபோதும், தொடர்ந்து இதுபோன்ற துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றது.