Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் லஞ்சம் பெற்ற டி.எஸ்.பி-க்கு…. மாநில அரசு கொடுத்த அதிரடி தண்டனை….!!!!

உத்தரபிரதேசத்தில் கடந்த 2021ஆம் வருடம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார். அவற்றில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் காவல்துறையினர் தன் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பெண் அப்போது கூறினார். அத்துடன் வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து காவல்துறையினர் லஞ்சம் பெற்றுள்ளனர் எனவும் அப்பெண் குற்றச்சாட்டு கூறினார். அதனை தொடர்ந்து அரசு நிர்வாகம், ராம்வீரை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர் மீது வழக்குபதிவும் போடப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், இவ்வழக்கில் சர்மா லஞ்சம் பெற்ற விபரம் தெரியவந்தது. அவர் பலாத்கார வழக்கு விசாரணையில், குற்றவாளிகளிடமிருந்து ரூபாய்.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய வீடியோ அரசின் கவனத்துக்கு சென்றது. இதன் காரணமாக பணியிடை நீக்கத்தில் இருந்து வந்த வித்யா கிஷோர் சர்மாவை பதவியிறக்கம் செய்யும்படி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுவரை இல்லாத அடிப்படையில் முதல்-மந்திரியின் இந்த அதிரடி உத்தரவால் டி.எஸ்.பி. பணியிலிருந்து மீண்டும் வித்யா கிஷோர் சர்மா முதன் முதலாக போலீசில் சேர்ந்த கான்ஸ்டபிள் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Categories

Tech |