அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணுவத்தில் அக்னி வீரர் (ஆண்), அக்னி வீரர் (பெண்), சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் அல்லது கால்நடை செவிலியர் உதவியாளர் மற்றும் இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் இருந்து ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பத்தாளர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட முகாம் பற்றி அறிவிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை விண்ணப்பத்தாளர்கள் முகாமில் கட்டாயம் எடுத்து வர வேண்டும்.
மேலும் ஆவணங்களை எடுத்து வருவதற்கான அமைப்பு முறையும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் மற்றும் அவற்றை தவறான முறையில் எடுத்து வரும் விண்ணப்பதாரர் முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். இதனையடுத்து முழுவதும் தானியங்கி முறையில் நேர்மையாகவும் வெளிப்படை தன்மை மூலமும் பணிசேர்ப்பு நடைபெறும். இதனால் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றும் நபர்களிடம் இருந்து விலகி இருக்குமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கடின உழைப்பும், தயார் முறை மட்டுமே விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.