Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் மாத தானியங்கள் நிலுவை…. அரசின் ஒதுக்கீடு எங்கே…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கிடைக்குமா….???

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரீப் கல்யான் அண்ண யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி கோதுமை போன்ற உணவு தானியங்களை அளித்து வந்தது. கடைசியாக செப்டம்பர் 2022 உடன் இந்த திட்டம் முடிவடை உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து இந்த திட்டம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையா ஏற்ற மத்திய அரசு மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த திட்டத்தை நீடித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்த திட்டம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசிடம் இருந்து இந்த திட்டத்திற்கான தானிய ஒதுக்கீடு இன்னும் வரவில்லை என்றும் இதனால் அக்டோபர் மாதத்திற்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Categories

Tech |