Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகக்கோடு வண்டி பில்லாங்கால விளை பகுதியில் சுரேஷ்குமார்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரும்பு சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் எடை மேடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு மலர் என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ்குமார் தனது வீட்டின் முன்பு திடீரென உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாக சுரேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |