தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு முதன்மை செயலாளர் காகலா உஷா வெளியிட்டுள்ள செய்தியில்,ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கூடுதல் உதவி திட்ட இயக்குனர் நாகராஜ் முருகன் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியில் இருந்த கருப்பசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் அந்த காலி பணியிடத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குனர் முனைவர் எஸ் நாகராஜ முருகன் அவர்கள் பணியிடமாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்