தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலவச உதவி எண்ணான 1913 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04425619206, 04425619208 ஆகிய எங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமின்றி நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரபூர்வ twitter பக்கம் மூலமாகவும் மாநகராட்சி உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.