சோலாப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களுக்கு இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கோல் நகருக்கு அருகே நடந்த சாலை விபத்தில் குறைந்தது ஏழு பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். கோலாப்பூரில் இருந்து பந்தர்பூருக்கு யாத்ரீகர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வேகமாக வந்த வாகனம் அவர்கள் மீது மோதியதாக சோலாப்பூர் எஸ்பி ஷிரிஷ் சர்தேஷ்பாண்டே தெரிவித்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விபத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
உயிரிழந்த வார்க்காரி சகோதரர்களின் உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் காயமடைந்த வார்காரி சகோதரர்களுக்கு உடனடியாக மற்றும் முறையான சிகிச்சை அளிக்க நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று ஷிண்டே ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து சங்கோலா அருகே நேற்று மாலை 6.45 மணியளவில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலாப்பூரில் உள்ள ஜதர்வாடியில் இருந்து கோவில் நகரமான பந்தர்பூருக்கு பக்தர்கள் திண்டியில் நடந்து கொண்டிருந்தனர். PTI அறிக்கையின்படி, 32 பக்தர்கள் கொண்ட குழு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு நடக்கத் தொடங்கியது மற்றும் சங்கோலா அருகே சென்றபோது வேகமாக வந்த கார் ஓன்று பின்னால் இருந்து அவர்கள் மீது மோதியது. அதிவேகமாக சென்ற வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, வாகனம் மோதியதில் 15 யாத்ரீகர்கள் காயமடைந்தனர். இதில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Maharashtra CM Eknath Shinde expresses grief over Solapur road accident, announces an immediate assistance of Rs 5 lakh each to the families of the deceased.
— ANI (@ANI) October 31, 2022