விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று அசல்கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார்.இறுதியில் அசிம் மற்றும் அசல் கோளாறு இருவரும் மற்றும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் யார் காப்பாற்றப்படுவார் என நினைக்கிறீர்கள் என கமல் கேட்டபோது பலரும் அசல் தான் உள்ளே இருப்பார் என கூறினார்கள். அதிலும் குறிப்பாக நிவாஸினி அசல் கண்டிப்பாக இங்கே இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதே சமயம் என்னை எதற்காக இங்கே நிற்க வைத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை என அசல் கோளாறு கூறினார். பின்னர் இறுதியாக அசல் எலிமினேட் ஆகி வெளியில் சென்ற பிறகு நிவாஸினி கதறி கதறி அழுதார். அப்போது அசல் கோளாறு வெளியில் அனுப்புவதற்கு முன்பு கமல் ஒரு விஷயத்தை கூறினார். எதற்காக இங்கே நிறுத்திட்டாங்க என கேட்டீங்க,வெளியே போய் உங்க நண்பர்களிடம் கேளுங்க அவங்க சொல்லுவாங்க என கமல் கூறினார்.அதாவது பெண்களிடம் எல்லை மீறியது பற்றி தான் மறைமுகமாக கமல்ஹாசன் அப்படி கூறி வெளியில் அனுப்பி வைத்திருக்கிறார்.