Categories
தேனி மாவட்ட செய்திகள்

காதல் கணவர் மீது புகார்…. மண்ணெண்ணெய் கேனுடன் காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி கிராமத்தில் திலகவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் நேற்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தனது மூன்று குழந்தைகளுடன் வந்துள்ளார். அவருடைய கையில் வைத்திருந்த பைமீது சந்தேகம் அடைந்த போலீசார் அதனை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் அந்த பெண் மண்ணெண்ணெய் கேன் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அவரிடம் இருந்து போலீசார் அதனை வாங்கியுள்ளனர். இதனால் அந்தப் பெண் தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயன்றுள்ளார். அதன் பின் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையில் அவர் வடபுதுபட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாகவும் அவர் தற்போது வரதட்சனை கேட்டு கொடுமை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் பல பெண்களை அவர் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியுள்ளதாகவும் கூறினார். எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் அந்த பெண் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணை போலீசார் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |