Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சூறையாடிய நபர்…. பள்ளியில் பரபரப்பு சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி கீழ் குமாரமங்கலம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் கையில் இரும்பு கம்பியுடன் பள்ளிக்குள் நுழைந்த வாலிபர் வகுப்பறையிலிருந்த ஜன்னல் கண்ணாடி, ப்ரொஜெக்டர், இன்வெர்ட்டர், கணினி, குடிநீர் எந்திரம் ஆகியவற்றை அடித்து உடைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்ற போது இரும்பு கம்பியால் அவர் ஆசிரியர்களை தாக்க முயன்றார்.

இதனால் ஆசிரியர்கள் மற்றொரு வகுப்பறைக்குள் சென்று விட்டனர். ஆசிரியர்களும் மாணவர்களும் சத்தம் போட்டதால் வாலிபர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட பாஸ்கரன்(25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் பாஸ்கரனை பிடித்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |