Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலியை போல…. பிரஷரை சமாளிக்க முடியாது…. யாரோடும் ஒப்பிடாதீர்கள்… பாக் வீரர் புகழாரம்.!!

விராட் கோலியை எந்த பேட்டர்களுடனும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்..

8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 2  போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு  போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி இக்கட்டான நிலையில் சிக்கி தவித்த போது விராட் கோலி 53 பந்துகளில் 82* ரன்கள் அடித்து இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதேபோல நெதர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி 62 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இரண்டு போட்டியிலுமே கிங் கோலி சிறப்பாக ஆடி நல்ல பார்மில் இருக்கிறார். உலகக் கோப்பையில் எதிரணி பயப்படும் அளவிற்கு அவரது ஆட்டம் இருக்கிறது. கடந்த சில காலங்களாக பார்மில்லாமல் தவித்து வந்த கோலி ஆசிய கோப்பை தொடரிலிருந்து தனது ஃபார்மை அப்படியே தொடர்கிறார். விராட் கோலியை முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்..

இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியில் 82*(53) ரன்கள் எடுத்த விராட் கோலியைப் பற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், “மக்கள்.. அவரை வெவ்வேறு பேட்டர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.. ஆனால் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஒப்பிடலாம், “பாகிஸ்தானுக்கு எதிராக கோலி செய்ததை அவரால் மட்டுமே செய்திருக்க முடியும். கோலியைப் போல அழுத்தத்தை சமாளிக்கக்கூடிய எந்த பேட்டரும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்திய அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Categories

Tech |