தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. அதனால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மலைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
Categories
வடகிழக்கு பருவமழை…. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
