Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்…. சிறுமியை மீட்ட பொதுமக்கள்…. நீதிபதி அதிரடி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகத்தான்பட்டியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காட்டுபக்கம் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் சிறுமியை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மாரிமுத்துவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இதனை அடுத்து அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Categories

Tech |