Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சீக்கிரம் இதை சரி செய்யுங்க”…. போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்…. அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக கார் லாரி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள பைபாஸ் சாலை வழியாகத்தான் ரவுண்டானா அருகில் பழனி சாலையில் வந்து இணையும். இவ்வாறு இணையும் இடத்தில் 15 பேருந்துகள் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ரவுண்டானா அருகில் இருந்து பழனி சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ரவுண்டானாவிற்கு கீழ்ப்புறம் பழனி சாலையில் வாகனங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொறுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |