திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நாகபிரியா(30) தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக நாகபிரியாவும், பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் சின்னச்சாமி(32) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதனால் நாகப்பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில் வேறொரு பெண்ணுடன் சின்னசாமிக்கு திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இதனால் நாகபிரியா உறவினர்களுடன் திருமணம் மண்டபத்திற்கு வந்து திருமணத்தை நிறுத்தி தன்னை சின்னச்சாமி ஏமாற்றியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.