Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான உதவித்தொகை உயர்வு…. இவ்வளவு தெரியுமா….? தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!!!

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவையில் மற்ற நல வாரியங்களில் அரசு நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகைகளுக்கு இணையான தொகை பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உதவி தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி விபத்தால் மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை 1 லட்சத்திலிருந்து 1.25 லட்சம் ஆகவும், இயற்கை மரண உதவித்தொகை 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ஆகவும், பட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை 2000 லிருந்து 4000 ஆகவும் உயர்த்தப்பட்டது. திருமண உதவித் தொகையை பொருத்தவரை ஆணாக இருந்தால் 3000, பெண்ணாக இருந்தால் 5 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |