இனி வருகின்ற நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா விளங்குகிறது அங்கு வைரசின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஒமேக்கான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் விதமாக புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை ஜனாதிபதி பைடன் நேற்று முன்தினம் செலுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பேசும் போது இந்த வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புதிய மாறுபாடுகள் தோன்றியிருக்கிறது.
உங்கள் பழைய தடுப்பூசி அல்லது உங்கள் முந்தைய கொரோனா தொற்று உங்களுக்கு அதிகமான பாதுகாப்பை வழங்காது. அதேபோல் அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை போடவில்லை வானிலை குளிர்ச்சியாகி வருவதனால் மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள். அதனால் கொரானா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். மேலும் நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 பேர் கொரோனாவால் இறந்து வருகின்றனர் இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.