Categories
ஆன்மிகம் இந்து

ருத்ராட்சம் அணிவதற்கு முன்பு இவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

ருத்ராட்சம் அணிவதால் பல நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் அவை அணிவதற்கு முன்பு அவற்றை பற்றி சிலவைகளை தெரிந்து கொள்ளலாமே..!

ருத்ராட்சம் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. நெற்றி நிறைய பட்டை, காவிச் சட்டை, கழுத்தில் ருத்ராட்ச கொட்டை இதெல்லாம் ஆன்மிகவாதிகளும், சாமியார்களுக்கும் மட்டுமே உரியது என்று நினைப்பவர்கள் உங்கள் எண்ணத்தில் இருந்து வெளியே வாருங்கள்.

உலகில் உள்ள உயிரினங்களின்  நன்மைக்காக சிவபெருமான் பல்லாண்டு காலம் பிறகு தியானம் முடிந்து கண்களை திறந்த சிவபெருமானின் கண்களிலிருந்து பெருகிய ஆனந்தக்கண்ணீர் தான் ருத்ராட்சம் மணிகளாக  மாறியதாக சிவபுராணம் கூறுகிறது.

ருத்ரம் என்றால் சிவன் என்று பொருள்படும். ராட்சம் என்பது சிவனுடைய கண்களை குறிப்பதாகும்.இவரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் சொட்டுக்கள் என்பதால் இதற்கு ருத்ராட்சம் என்ற பெயர் வந்தது. இதற்கு கடவு மணி, நாயக மணி, தெய்வமணி, சிவமணி, கண்மணி என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண், பெண், மதம், இனம் என எந்த விதமான பேதமும் இன்றி அனைவரும் ருத்ராட்சம் அணியலாம். ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீமத் தேவி பாகவதம் கூறுகிறது. எவ்விதமான மந்திரங்களையும் உச்சரித்து எவனும் யாகங்களை செய்யாதவனும், அறியாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை தொட்டால்  அவன் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவான்.

ருத்ராட்ச மாலை அணிந்து வழிபடுபவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு,  மீண்டும் எடுக்கும் அத்தனை பிறவிகளிலும் விடுபடுவான். ருத்ராட்சம் மீது நம்பிக்கை இருந்தாலும், இல்லை என்றாலும் அதை அணிந்து கொண்ட காரணத்திற்காகவே அவன் ருத்ராட்சத்தை பெறுவார்கள்.

மேலும் ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களை கழுவி அந்த நீரை தீர்த்தமாக ஏற்றுக்கொள்பவன் சிவலோகத்தை அடைகிறான். ருத்திராட்சம் அணிந்தவருக்கு எவனொருவன் உணவும், உடையும் தருகிறானோ அவனும் சிவலோகத்தில் அடைகிறான்.

ருத்ராட்ச மணிகள் மஞ்சள், வெண்மை, கருமை என மூன்று நிறங்களை கொண்டிருக்கும். சிவபெருமானின் கண்ணிலிருந்து மஞ்சள் ருத்ராட்சம் 12-ம், இடது கண்ணில் இருந்து 16 வெள்ளை ருத்ராட்சம், நெற்றிக்கண்ணில் இருந்து 10 கருமை ருத்திராட்சங்கள் தோன்றின.

ருத்ராட்சம் 1-21 முகங்கள் வரையிலும் கொண்டிருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இயற்கையில் விளைந்த ருத்ராட்சம் இயற்கை சக்திகளையும் அள்ளித்தருகிறது. பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் நவகிரகம். அத்தகைய நவகிரகங்களினால்  ஒருவனுக்கு உண்டாகக்கூடிய பாதிப்பை குறைக்க ருத்ராட்சம் உதவுகிறது.

ஆனால் தவறான ருத்ராட்சம் அணிந்தால் பல கேடுகளை அனுபவிக்க வேண்டியதாகி விடும். ருத்ராட்சத்தை பார்த்தாலே மகா புண்ணியம் கிடைக்கும். அதை தொட்டுப்பார்த்தால் கோடி புண்ணியம் என்று சொல்வார்கள் அதை அணிந்தால் அளவற்ற புண்ணியம் என்பது ஐதீகம்.

Categories

Tech |