இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை பல மாற்றங்களை செய்து அவ்வபோது புதுப்பிக்க வேண்டும் . தற்போது அனைத்து வேலைகளுக்கும் பயன்படும் ஆதார் கார்டை வைத்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
நம்முடைய ஆதாருடன் மொபைல் நம்பர் வங்கி மற்றும் பான் கார்டு எண்ணை இணைத்து வைத்துள்ளதால் எதிர்பாராத விதமாக உங்களின் ஆதார் கார்டு மோசடி நபர்களிடம் சிக்கினால் வங்கி சார்ந்த விவரங்கள் அனைத்தும் திருடப்படும். அதனைப் போலவே அமைப்பு மற்றும் வங்கியிலிருந்து பேசுவது போல ஆதார் அட்டை தாரர்கள் அணுகி ஒரு லிங்கை நாங்கள் அனுப்புவோம் அதனை கிளிக் செய்து உடனே ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதனை நம்பி மக்கள் அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் திருடப்படும்.
இந்நிலையில் ஆதாரங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதாரை புதுப்பிக்கும் அமைச்சகம் தனிப்பட்ட நபர்களை தொலைபேசி மூலமாக அழைத்து அதனால் ஆதார் அமைப்பில் இருந்து போன் செய் வதாக கூறினால், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் மேலும் ஆதாரை புதுப்பிக்க அதிகாரபூர்வ இணையதளம் அல்லது அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.