Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…. ஒரு எருமை விலை 35 கோடி ரூபாயா?….. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?…..!!!!

ஹைதராபாத்தில் ஒவ்வொரு வருடமும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். அதில் விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த வருடமும் சிறப்பாக கட்டப்பட்ட நிலையில் கருடன் என்ற எருமை சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் ஹைமத் ஆலம்கானிடம் 35 கோடி கொடுத்து இந்த நான்கு வயதான கருடன் எருமையை வாங்கியுள்ளார் .

அதனைப் போலவே அவரிடம் 10 எருமைகள் உள்ளது. இந்த எருமைகளை விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் கருடன் விந்து  ஒரு துளி 1,200 ரூபாய் முதல் 1, 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த எருமையின் பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழிமுட்டை, கொண்டக்கடலை, கடலைப்பருப்பு,  வெந்தய விதைகள், வேர்க்கடலை, பீட்ரூட் ஆகியவைதான் உணவு என குறிப்பிடப்படுகிறது.

Categories

Tech |