Categories
மாநில செய்திகள்

“கோவை மண்ணில் மக்களை காப்பாற்ற சூரசம்ஹாரம்”…. வானதி சீனிவாசன் ஸ்பீச்….!!!!

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசன் இன்று சுவாமியை தரிசனம் செய்தார். இதையடுத்து வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் “கடந்த ஞாயிற்றுக்கிழமை கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் நடந்த சிலிண்டர் வெடிப்பு, அதன் வாயிலாக ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதனுடைய ஆரம்பகட்ட முயற்சி இறைவனின் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சங்கமேஸ்வரர் பல்வேறு நூற்றாண்டுகளாக கோவையை காத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஆகும். இன்று கந்தசஷ்டியின் முதல் நாள். அதர்மத்தை அழிப்பதற்காக இறைவன் முருகன் எப்படி போரிட்டு சூரசம்ஹாரம் செய்தாரோ, அதுபோன்று சூரசம்ஹாரம் கோவை மண்ணில் இந்த மக்களை காப்பாற்ற நடைபெற்று இருக்கிறது. சாதாரணம் ஆக நடைபெறும் சம்பவங்களுக்கு, செயல்களுக்குகூட கருத்து கூறும் அரசியல்வாதிகள் யாரும் கோவைக்கு வரவில்லை.

போலீஸ் துறையை தன் கட்டிப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர், கோவை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் நிலையில் இடத்தை பார்க்கக்கூட வராதது கண்டனத்திற்குரியது. சர்தேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு முகமையிடம் முதல்வர் ஒப்படைக்கவேண்டும். இவ்விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவம் பார்க்காமல் கோவைக்கு வரவேண்டும். அத்துடன் கோவை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவேண்டும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |