Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற வாலிபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

விலங்கை வேட்டையாடிய வாலிபருக்கு வனத்துறையினர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனச்சரகர் பழனி குமாரின் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அழகாபுரியில் வசிக்கும் வீரன்வல்லரசு(21) என்பது தெரியவந்தது.

இவர் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளார். பின்னர் அதன் 8 கிலோ இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போது வனத்துறையினரிடம் சிக்கிக்கொண்டார். இதனை அடுத்து வீரன்வல்லரசு மீது வழக்குப்பதிந்து வனத்துறையினர் இறைச்சியை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |