முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்றும், நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறக்கூடிய இந்தநிகழ்ச்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணியாக திரண்டு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பசும்பொன் செல்வார் என்று தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர் சென்னை நந்தனத்தில் இருக்கக்கூடிய ஒரு சிலைக்கு மரியாதை செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேவர் திருமகனாரின் 115 ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனை தொடர்ந்து தலைமை கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவஅணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல அதிமுக வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தேவர் திருமகனாரின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜையை முன்னிட்டு 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க கீழ்கண்ட தலைமை கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்களான திரு.திண்டுக்கல் சீனிவாசன் எம் எல் ஏ, திரு.நத்தம் விசுவநாதன், எம் எல் ஏ, திரு.செல்லூர் கே ராஜு, எம்எல்ஏ, திரு. ஆர்.காமராஜ், எம்.எல்.ஏ, திரு.ஓ.எஸ் மணியன், எம் எல் ஏ, டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்எல்ஏ, திரு. கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ, திரு. ஆர்பி உதயகுமார், எம்எல்ஏ, திரு. கே.டி ராஜேந்திர பாலாஜி, திரு. வி. கருப்பசாமி பாண்டியன், எக்ஸ் எம்எல்ஏ, திரு.ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ, திரு. இசக்கி சுப்பையா, எம்எல்ஏ, திருமதி கீர்த்திகா முனியசாமி, திரு. ஆர்.முருகையா பாண்டியன், எக்ஸ் எம்எல்ஏ, திரு.பாஸ்கரன், டாக்டர் எம்.மணிகண்டன், திரு எம்.ஏ முனியசாமி, திரு. தச்சை கணேசராஜா, திரு.பி.ஆர் செந்தில்நாதன், எம்எல்ஏ, திரு கிருஷ்ண முரளி, எம்எல்ஏ, திரு. ஆர்.கே ரவிச்சந்திரன், திரு. பி.கே வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.