Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காட்டு பழம் என நினைத்து….. விஷ காய்களை தின்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விஷ காய்களை தின்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தில் கனிவிகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காட்டுப்பழம் என காட்டு பழம் என நினைத்து விஷ காய்களை பறித்து தின்றதாக கூறப்படுகிறது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |