Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து….!!!

லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் ஐசக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருபாகரன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது நண்பரான ஜீவா(19) என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர்கள் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே சென்றபோது வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த பிரபாகரன் கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்துவிட்டார். ஜீவா அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கிருபாகரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |