கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பதிவில், கோவை கார் சிலிண்டர் விபத்து பற்றி புதுப் புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பண்டிகை சமயத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் விதமாக நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கிறது. தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையே இது வெளிக்காட்டுகிறது. சட்டஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கிய பணியாக இருக்க வேண்டும். இனிமேல் தமிழகத்தின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத் துறை கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.