Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக்கை மூடுங்கள்?…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…..!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

இந்நிலையில் தீபஒளி , பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு கடந்த இருநாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட பணம் ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |