பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள புத்தூர் வயல் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர். மறுநாள் காலை தனது மனைவியை காணவில்லை என மோகன் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த உஷாவின் தம்பி காவல் நிலையத்தில் தனது அக்காவை காணவில்லை என புகார் அளித்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மோகனிடம் விசாரிக்க சென்ற போது வீட்டு சுவர்களில் ரத்த கடைகள் இருப்பதை பார்த்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் உஷாவை சுவர் மீது மோகன் தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதால் அவரது உடலை நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காரில் கொண்டு சென்று சாலையோரம் இருக்கும் பள்ளத்தாக்கான புதரில் வீசியதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அழுகிய நிலையில் கிடந்த உஷாவின் உடலை போலீசார் கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.