கலவரம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்று ஹரியானா மாநில அமைச்சர் ரஞ்சித் சவுதாலா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டதில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் கடந்த 3 நாட்களில் தலைமைக் காவலர் ரத்தன் லால், உளவுப் பிரிவு பணியாளர் அன்கித் சர்மா உள்பட 38 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் ஏற்றப்பட்ட இந்த வன்முறை வெறியாட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஹரியானா அமைச்சர் ரஞ்சித் சவுதாலா கூறியதாவது டெல்லிக்கு கலவரம் ஒன்றும் புதிதல்ல. 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கிய எதிர்ப்புக் கலவரம் நிகழ்ந்து. டெல்லிக்கு வன்முறை என்பது வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்டது கூறிய சர்ச்சை கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.