Categories
மாநில செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி மூப்பு வழக்கு….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டது.மேலும் 1994-95 இல் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் தங்களுக்கு பணி மூப்பு கேட்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தனர். இந்நிலையை 1994-95 ல் படி பணி மூப்பு வழங்க கோரி 20 பேர் சென்னை உயர்நீதிமன்ற தொடரப்பட்ட வழக்குகள் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு மேலும் சிலர் தொடந்த வழக்குகளை விசாரித்த மற்றொரு தனி நீதிபதி மனுதாரர்களுக்கு பணி மூப்பு வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்பாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, இரண்டாவதாக தொடரப்பட்ட வழக்குகளை தனி நீதிபதி வழக்கை ஏற்றுக் கொண்டதன் மூலம் 1997-98 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு முன் பணி மூப்பு அடைந்தவர்கள் ஆகிவிடுவார் என்பதால் அவர்களின் விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அந்த உத்தரவிலிருந்து மாறுபட்ட உத்தரவை பிறப்பிக்கும் போது அதை மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்விற்கு தான் பரிந்துரைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 98 உதவி ஆய்வாளர்கள் நியமனம் என்பது அரசின் பெருந்தன்மை அடிப்படையிலானது என்றும், பணி மூப்பு கேட்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டி, இவர்களுக்கு பனிமொப்பு வழங்க வேண்டும் என்று தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

Categories

Tech |