Categories
சினிமா தமிழ் சினிமா

என் மகளை காணவில்லை….. மீரா மிதுன் தாய் காவல் நிலையத்தில் புகார்…. பரபரப்பு….!!!!

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது.அப்போது காவல் துறையி தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரது தாய் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மீரா மிதுனை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறும் அவரது தாயார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Categories

Tech |