தீபாவளி பண்டிகை வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வருகின்ற 23 ஆம் தேதி உத்தரபிரதேச மாநில அயோத்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பகவான் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து வழிபடுகிறார். அதனை தொடர்ந்து ஸ்ரீராமஜென்ம பூமி தீர்க்க ஷேத்திரத்தை அவர் ஆய்வு செய்ய இருக்கிறார். பகவான் ஸ்ரீராமருக்கு ராஜயாபிஷேகத்தை பிரதமர் மேற்கொள்கிறார். சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிடுகிறார்.
அதன்பிறகு பிரம்மாண்டமான தீப உற்சவம் கொண்டாட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து இந்த ஆண்டு தீப உற்சவத்தின் 6 வது பதிப்பு நடைபெறுகிறது. முதல் நாளாக பிரதமர் இதில் நேரடியாக கலந்து கொள்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்படும். தெய்வ உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். மேலும் சரயு நதியில் கரைகளில் பிரமாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமான ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார்.