Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 4 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி….!!!

2018 ஆம் வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையானது கடந்த மே மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்த போலீசின் இன்ஸ்பெக்டராக இருந்த திருமலை என்பர் உத்தரவிட்டார் .அதில் கந்தையா மற்றும் தமிழரசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் பலரது உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் உள்ள திருமலை, காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |