பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகார பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறியிருப்பதாவது “இந்தியாவில் தற்போது பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. இதனால் இப்போதைக்கு தானியங்களின் விலையானது அதிகரிக்க வாய்ப்பில்லை. இதனிடையில் மத்திய அரசிடம் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு இருக்கிறது. இப்போது சில மாநிலங்களில் வெங்காயம் விலையானது உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து அம்மாநிலங்களுக்கு வெங்காயம் உடனே அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தியாவில் வருடத்திற்கு 2 கோடியே 72 லட்சம் டன் அளவிற்கு பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு வகைகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதியைதான் நாம் இறக்குமதி செய்து வருறோம். நடப்பு ஆண்டு நம்மிடம் 43 லட்சம் டன் பருப்பு இருப்பில் இருக்கிறது. ஆகவே தற்போதைக்கு தட்டுப்பாடு ஏற்பட எந்த வாய்ப்பும் இல்லை. எனினும் தேவை அதிகமாக ஏற்பட்டால் அதை உடனே கொள்முதல் செய்யவும் தயாராக இருக்கிறோம்.