காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உட்பட 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..